தேர்தல்: போலீஸ் பாதுகாப்பைத் துறந்தார் சுமித்ரா மஹாஜன்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும், விதிமுறைகளின்படி தனக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று
தேர்தல்: போலீஸ் பாதுகாப்பைத் துறந்தார் சுமித்ரா மஹாஜன்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும், விதிமுறைகளின்படி தனக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மக்களவைத் தலைவரும், இந்தூர் தொகுதி எம்.பி.யுமான சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்துக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்தத் தேதியிலிருந்து, அரசு அளித்த வாகனங்களைப் பயன்படுத்துவதை நான் நிறுத்திவிட்டேன்.
 எனினும், மக்களவைத் தலைவர் என்ற அரசியல் சாசனப் பதவியில் இருப்பதால், விதிமுறைகளின்படி எனது தனிப்பட்ட வாகனத்தை காவல்துறையினரின் வாகனங்கள் தொடர்ந்து வருகின்றன. மேலும், எனக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
 இந்தூர் மிகவும் அமைதியான நகரம் என்பதால், எனக்கு காவல்துறை வாகனங்களோ, பாதுகாவலர்களோ தேவையில்லை. எனவே, விதிமுறைகளின்படியான அந்தச் சலுகைகள் இனி எனக்குத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com