புது தில்லி: பண மோசடி வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் மனுவை நீட்டித்து அவரை மார்ச் 25ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கில், இன்றைய விசரணையின் போது, ராபர்ட் வதேரா விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று அமலாக்கத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ராபர்ட் வதேராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.
எனினும், வத்ராவுக்கு முன்ஜாமீனை நீட்டித்து சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.