விரலில் மை வைத்துக் கொண்டு அதனுடன் ஒரு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஒன்று மட்டுமே நமது ஜனநாயகக் கடமை என்று நினைத்திருக்கிறார்கள் இளைஞர்களில் பலர்.
ஆனால், உண்மையிலேயே நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட நல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளோமா? சரியான வேட்பாளருக்கே நமது வாக்கினை செலுத்தியுள்ளோமா என்றெல்லாம் ஆராய்வது வெகு சிலரே.
இதுவரை 16 முறை இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்குக் கொடுக்கப்படும் நல் வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பது குறித்து இன்னமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில்தான் இந்திய அரசில்வாதிகள் மக்களை வைத்துள்ளனர்.
சரி, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று சொல்லும் போதுதான் பொதுத் தேர்தல்களுக்கு நமது மத்திய அரசுக்கு எவ்வளவுதான் செலவு செய்கிறது? என்பது குறித்த கேள்வியும் எழுந்தது. அது பற்றி தேடியதில் கிடைத்திருக்கும் தகவல்..
சரி பாருங்கள் இந்த பட்டியலை..
தேர்தல் நடந்த ஆண்டு | செலவான தொகை ரூபாயில் | ||
1952 |
| ||
1957 |
| ||
1962 |
| ||
|
| ||
|
| ||
|
| ||
|
| ||
|
| ||
|
| ||
1991-92 |
| ||
1996 |
| ||
1998 |
| ||
1999 |
| ||
2004* |
| ||
2009# |
| ||
2014 |
|
இதுதான், 1952 முதல் 2014 பொதுத் தேர்தல் வரை நமது மத்திய அரசு தேர்தலுக்காக செலவிட்ட தொகையாகும். இது வெறும் மத்திய, மாநில அரசுகள் செய்த செலவு மட்டுமே, இதில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் செய்த செலவு அடங்காது.
இந்த செலவு முழுக்க முழுக்க தேர்தல் அலுவலர்களை பணிக்கு அமர்த்துவது, வாக்குச் சீட்டுகள் தயாரிப்பது, தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவு, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட செலவுகள் அடங்கும்.
*இந்த செலவுத் தொகை என்பது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செலுத்திய பங்குத் தொகையும் அடங்கும். 2004 மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளும் இதில் அடங்கும்.
#2009 மக்களவைத் தேர்தலை நடத்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தொகையும் அடங்கும்.