காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பந்திபோரா மாவட்டத்தில் உள்ளூர்வாசி இருவரை பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சிறைப்பிடித்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஹாஜின் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதேபோல், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, இமாம்சாஹிப் என்ற இடத்தருகே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஒருவர் மீட்பு: இதனிடையே, பயங்கரவாதிகளின் பிடியில் இருவரில் அப்துல் ஹமீது என்பவர் பாதுகாப்புப் படையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டார். இரண்டாவது நபரான ஆட்டிஃப் அகமது என்ற 12 வயது சிறுவனை பயங்கரவாதிகள் கொலை செய்து விட்டனர் என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com