மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின் வெளியீட்டின் போது உறுதிபடுத்தப்பட்டது.
இதனிடையே தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல், போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட அவரது பெயரில் விருப்பமனு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியட வேண்டும் என அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராகுல், இன்றைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.