விமானத்தில் போதைப் பொருள்கடத்த முயற்சி: 2 பேர் கைது

கர்நாடகத்தில் விமானத்தில் போதைப் பொருள் கடத்த முயற்சித்த 2 பேரை போதைத் தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். 

கர்நாடகத்தில் விமானத்தில் போதைப் பொருள் கடத்த முயற்சித்த 
2 பேரை போதைத் தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். 
கேரள மாநிலம் மலப்புரத்தைத் சேர்ந்தவர் நெளஷத் (24).  கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நெளஷீர் (29).  இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு செல்லும் விமானத்தில் கோகைன், ஆஷீஷ், சிரஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்த முயன்றுள்ளனர்.  தகவல் அறிந்த விமான நிலைய போதைத் தடுப்பு படையினர்,  இருவரின் உடமைகளை பரிசோதனை செய்து, ரூ. 6 கோடி மதிப்பிலான கோகைன், ஆஷீஷ், சிரஸ், கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.  
இதனையடுத்து, நெளஷத், முகமது நெளஷீர் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com