காங்கிரஸ் பேருந்து யாத்திரை: குலாம் நபி ஆசாத் துவக்கி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் 6 நாள் பேருந்து யாத்திரையை அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார். 
காங்கிரஸ் பேருந்து யாத்திரை: குலாம் நபி ஆசாத் துவக்கி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் 6 நாள் பேருந்து யாத்திரையை அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செவ்வாய்கிழமை துவக்கி வைத்தார். ஹரியாணாவில் நடைபெறும் இந்த பேருந்து யாத்திரை தொடர்பாக நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

ஹரியாணாவில் இன்று முதல் பரிவர்தன் யாத்திரை நடைபெறும். ஒட்டுமொத்த தேசமும் மத்தியிலிருந்து பாஜக அரசை வீழ்த்த நினைக்கிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

அதிலும் பாஜக அரசின் கீழ் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் வன்முறை பெருகியுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com