மத்திய பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் செவ்வாய்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை 6 மணிமுதல் ஜகரகுண்டா எனுமிடத்தில் உள்ள பீமாபூரிலிருந்து ஒரு கிலோ மீட்டரில் அமைந்துள்ள வனப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதையடுத்து 4 மாவோயிஸ்ட்களின் உடல் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை சிஆர்பிஎஃப் வீரர்கள் பறிமுதல் செய்தனர். மாவோயிஸ்ட்களை அழிக்கும் விதமான கோப்ரா வகை தாக்குதலாக இது நடத்தப்பட்டது.