அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு பிறப்பித்த உத்தரவை பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாகக் கருதக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வைத்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டிடிவி தினகரனின் அமமுகவை சுயேச்சையாகக் கருதி பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், டிடிவி தினகரன் வழக்கில் பொதுச் சின்னம் வழங்க உத்தரவிட்டதை, மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது.
இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.