கர்நாடக அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவின் வீடு, உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறிய ஒரு சில மணி நேரங்களில், கர்நாடகாவின் வேளாண் துறை அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
பாண்டவபுராவில் உள்ள புட்டராஜூவின் வீட்டுக்கு ஏராளமான வாகனங்களில் வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.