கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.
இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அபஷ் எஸ்.ஒகா, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராமச்சந்திரன் மேனன், சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரா, ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.