பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நண்பராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் போது மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நண்பராக இருக்கும் போது மசூத் அஸார் அறிவிப்பு எந்த வகையில் பயன் தரும் என்று தெரியவில்லை.
எனவே தாவூர் இப்ராஹிம், மசூத் அஸார் மற்றும் ஹஃபீஸ் சயீது உள்ளிட்ட பயங்கரவாதிகள் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.