புவனேஸ்வர்: ஒடிஸாவில் இன்று காலை 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயலின் கண் பகுதி கரையைக் கடந்து வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயல் மதியம் 11 மணிக்கு கரையை நடந்து முடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவின் கடலோரப் பகுதிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண் 1938 அறிவிக்கப்பட்டுள்ளது.