உத்தரப்பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஷாஜஹான்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 289-ஆம் எண் ஜலாலாபாத் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி, 68 மற்றும் 327 ஆகிய திஹார் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள், 368 மற்றும் 351 ஆகிய போவாயன் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள், 140, 255 மற்றும் 371 ஆகிய தத்ரௌலா பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள் ஆகிய இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் வருகிற மே 6-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.