பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
 "நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன் சிங்' என்று அவர் கூறியுள்ளார்.
 முன்னதாக, மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், "நாட்டின் பொருளாதாரத்தை மோசமான சூழலுக்கு இட்டுச் சென்றிருக்கிறது மோடி அரசு; பொருளாதார மந்த நிலையை நோக்கி நாடு நகர்வதை உணர்கிறேன்' என்று கூறியிருந்தார்.
 அவரது விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்து, ஜேட்லி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-இல் நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன் சிங். கொள்கை முடக்கமும், ஊழல்களும்தான், தனக்கடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசுக்கு மன்மோகன் சிங் விட்டுச் சென்ற பரிசாக இருந்தன. அதுமட்டுமன்றி, கடந்த மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் காங்கிரûஸ சிறிய கட்சியாக சுருங்க வைத்த பெருமையும் மன்மோகன் சிங்கையே சாரும்.
 அவரது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த சூழல் இல்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், அரசியல்வாதியாக மாறிய பிறகு, பொருளாதார அறிவையும், அரசியல் அறிவையும் இழந்து விட்டார் என்று ஜேட்லி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com