கிரேட்டர் நொய்டாவில் அம்பேத்கர் சிலை மீது கல்வீச்சு

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா அருகே மோட்டார் பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் சிலர் அம்பேத்கர் சிலை மீது கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா அருகே மோட்டார் பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் சிலர் அம்பேத்கர் சிலை மீது கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஜார்சா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, சித்திப்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. 
இதை நேரில் பார்த்த மக்கள் கூறுகையில், மோட்டார் பைக்கில் குடிபோதையில் வந்த 4 அல்லது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அம்பேத்கரின் சிலை மீது கல் வீசினர் என்றனர். 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கான்கிரீட் மேடை மீது பாதுகாப்புடன் சிலை வைக்கப்பட்டிருந்ததால், சிலைக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை. அருகிலுள்ள கியாவாலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கல்வீச்சில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com