'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள்: முதல்முறை வாக்காளர்களை எச்சரித்த மோடி 

'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள்: முதல்முறை வாக்காளர்களை எச்சரித்த மோடி 

ஆஸம்கார்: 'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆஸம்காரில் வியாழனன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள்  கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

'கிச்சடி' போன்று உருவாக்கப்படும் கூட்டணி அரசுகளிடம் கவனமாக இருங்கள். இத்தகைய அரசுகள் அராஜகத்தையும் நிலையற்ற தன்மையையும் கொண்டு வந்து சேர்க்கும்.

இருபது வருடங்களுக்கு முன்பாக ஐக்கிய முன்னணி அரசானது நிலையற்ற தன்மையையும் ஆட்சிக் காலத்திற்கு முன்பே தேர்தல்களையும் கொண்டு வந்தது.  

அதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது தனது தொடர் ஊழல்களால் இந்தியாவே அவமானத்தில் தலைகுனியும்படி செய்தது. அத்தகைய அரசுகள் சவால்களை எதிர்கொள்ள இயலாதவை.

எனது அரசானது எப்போதும் தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனையே முன்னிறுத்தி செயல்பட்டுள்ளது.

அதேபோல் மக்களுக்கான பல்வேறு பொது நலத் திட்டங்களை முன்னெடுக்கும் போது எனது அரசானது, ஜாதி அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது கிடையாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com