காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
காஷ்மீர் மாநிலம், ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
மேலும அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.