புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.