லடாக்கில் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளில் தில்லு முல்லு?: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் மக்களவைத் தேர்தலுக்காக ராணுவ வீரர்கள் அளித்த தபால் வாக்குகளில் தில்லு முல்லு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளதால் அதுதொடர்பான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் மக்களவைத் தேர்தலுக்காக ராணுவ வீரர்கள் அளித்த தபால் வாக்குகளில் தில்லு முல்லு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளதால் அதுதொடர்பான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது, தொலைபேசியில் ராணுவ உயரதிகாரிகள் ராணுவ வீரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வாக்குப் பதிவில் ரகசியம் காக்கப்படாமல் போயுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி, ராணுவத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனடிப்படையில், மேஜர் ஜெனரலை ராணுவம் விசாரணைக்காக நியமித்துள்ளது.
ஸ்ரீநகர் ராணுவ செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் ராணுவத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு புகார் எழுப்பப்பட்டுள்ளது. எனினும், தீவிர விசாரணை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com