தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள், நாளை கொல்கத்தாவில் தான் இருப்பேன்: மம்தாவுக்கு அமித் ஷா அதிரடி சவால் 

​நான் இப்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறேன், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார். 
தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள், நாளை கொல்கத்தாவில் தான் இருப்பேன்: மம்தாவுக்கு அமித் ஷா அதிரடி சவால் 


நான் இப்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறேன், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார். 

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமித் ஷாவின் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கும், பரய்பூரில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் மேற்கு வங்க மாநில அரசு அனுமதி மறுத்தது. 

இந்த நிலையில், ஜெயநகர் தொகுதிக்குட்பட்ட கேனிங்கில் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"யாரேனும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினால் மம்தாவுக்கு கோபம் வருகிறது. நான் இன்று ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்புகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள். நாளை நான் கொல்கத்தாவில் தான் இருப்பேன். 

நான் பேரணிகளில் பங்கேற்பதை தடுக்க மம்தா விரும்புகிறார். நான் பேரணிகளில் பங்கேற்பதை வேண்டுமானால் திரிணமூல் காங்கிரஸ் தடுக்கலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி அணிவகுப்பை தடுக்கமுடியாது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com