வங்கி விசாரணையின்போது வழக்குரைஞர் மூலம் வாதிட "கடன் மோசடியாளர்களுக்கு' உரிமை இல்லை: உச்சநீதிமன்றம்

வங்கிகளிடம் கடன் பெற்றுவிட்டு வேண்டுமென்றே திரும்பிச் செலுத்தாதவர்களை "கடன் மோசடியாளர்கள்' என்று

வங்கிகளிடம் கடன் பெற்றுவிட்டு வேண்டுமென்றே திரும்பிச் செலுத்தாதவர்களை "கடன் மோசடியாளர்கள்' என்று அறிவிக்கும் நடைமுறை தொடர்பாக வங்கிகள் நடத்தும் உள்முக விசாரணையில் வழக்குரைஞர்களை வைத்துக் கொள்ள கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியிடம் கடன் பெற்ற ஜா டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம், கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தவில்லை. ரிசர்வ் வங்கி விதிகளின் படி அந்த நிறுவனம் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாத கடன் மோசடியாளர் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி அமைத்த உள்முக விசாரணையின்போது அந்த நிறுவனம் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வழக்குக் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் வங்கிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.
 இதையடுத்து, வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ரிசர்வ் வங்கி கடந்த 2015 ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வங்கிகளில் கடன் பெற்று விட்டு உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்களை கடன் மோசடியாளர்கள் என்று அறிவிப்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்ளும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் பிரதிநிதிகள், வங்கிகளின் உள்முக விசாரணைக் குழு முன்பு ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகும் போது அவர்கள் வழக்குரைஞர்களுடன் ஆஜராக எவ்வித உரிமையும் இல்லை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com