பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது: காங்கிரஸ்

பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 
பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது: காங்கிரஸ்


பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். கருத்து ஒற்றுமை ஏற்பட்டு அந்த முடிவு காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்தால், அதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை ஏற்கும். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களது ஒரே குறிக்கோள். 

பிரதமர் பதவி எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், வேறு யாரும் பிரதமர் ஆகக் கூடாது என்று நாங்கள் பிரச்னை ஏதும் ஏற்படுத்தமாட்டோம்" என்றார்.  

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடக்கம் முதலே எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com