மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16-இல் திருத்தங்களை மேற்கொண்டு, 103-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. 

அதையடுத்து இந்த சட்டத்தின்படி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. 

அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com