போஃபர்ஸ் வழக்கு விசாரணை தொடரும்: சிபிஐ

போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த விசாரணையை மேலும் தொடரப் போவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
போஃபர்ஸ் வழக்கு விசாரணை தொடரும்: சிபிஐ

போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த விசாரணையை மேலும் தொடரப் போவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நிதின் வாகங்கர் கூறியதாவது:
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக மைக்கேல் ஹெர்ஷ்மன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் புதிய தகவல்களை அளித்துள்ளார்.
அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போஃபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்தோம்.
அதற்காக விசாரணை நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம்.
எனினும், அந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கான தேவை இருப்பதாக சிபிஐ கருதினால், அந்த அமைப்புக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கலாம் என்றும், அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற தேவையில்லை என்றும் இந்த மாதம் 8-ஆம் தேதி நீதிபதி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பெற்ற சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், குற்றவியல் தண்டனைச் சட்டம் 173(8)-இன் கீழ் போஃபர்ஸ் வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை எனவும், இதுதொடர்பான தகவலை நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதும் எனவும் கூறி, தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த மாதம் 16-ஆம் தேதி மனு தாக்கல் செய்தோம்.
போஃபர்ஸ் ஊழல் குறித்த எங்களது விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.
முன்னதாக, போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி, தில்லியிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை சிபிஐ திரும்பப் பெற்றதாக தகவல் வெளியானது.
அதுகுறித்து விளக்கமளிக்கும் வகையிலேயே, நிதின் வாகங்கர் இவ்வாறு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com