மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தல்: பாஜக வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிட்டது என்றும் கடைசி கட்ட தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிட்டது என்றும் கடைசி கட்ட தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், முக்தார் அப்பாஸ் நக்வி, விஜய் கோயல் ஆகியோர் தேர்தல் குழுவை வியாழக்கிழமை சந்தித்தனர்.
அப்போது, மேற்கு வங்கத்தில் கடைசி கட்டத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். குண்டர்களை ஒடுக்க வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஆகியவற்றை பயன்படுத்தி தேர்தலை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று அவர்கள் அந்தக் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com