பாட்னா: பிகாா் மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவியின் இல்லத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா் கிரியப்பா கிராசூா் (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அவா் தற்கொலை செய்து இறந்திருக்கக் கூடும் என்று போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.