இறுதிக்கட்ட தேர்தல்: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 
இறுதிக்கட்ட தேர்தல்: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி மற்றும் ஏழாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. 

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு அணி மாறிய நடிகர் சத்ருகன் சின்ஹா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரதாத் உள்பட 918 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கோரக்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

இதேபோல் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com