ஆமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சோமநாதர் கோயிலில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.
கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு, அமித் ஷா தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சனிக்கிழமை வருகை தந்தார். பின்னர், கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அவர்கள் பங்கேற்றனர்.
மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவிருக்கிறது. மே 23-இல் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு, அவர் ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு திரும்புவார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் வாலா தெரிவித்தார்.
சோமநாதர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ சோமநாதர் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக அமித் ஷா உள்ளார். குஜராத் மாநிலம், காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அவர் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.