பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

கேதார்நாத் கோயிலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று பத்ரிநாத் கோலில் சாமி தரிசனம் செய்தார். 
பத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

கேதார்நாத் கோயிலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று பத்ரிநாத் கோலில் சாமி தரிசனம் செய்தார். 

பிரதமர் மோடி நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அருகே உள்ள குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி காலை குகையை விட்டு வெளியே வந்தார்.

கேதார்நாத் பயணத்தை முடித்ததும் பிரதமர் மோடி இன்று பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கு அவர் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பத்ரிநாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து பிரதமர் மோடி இன்று மதியம் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com