புனித குகையில் 18 மணிநேரம் தியானம் செய்த பிரதமர் மோடி! 

பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் புனித குகையில் தியானம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனித குகையில் 18 மணிநேரம் தியானம் செய்த பிரதமர் மோடி! 

பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் புனித குகையில் தியானம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அருகே உள்ள புனித குகைக்கு சென்று அவர் தியானம் மேற்கொண்டார். 

விடிய விடிய சுமார் 18 மணிநேரம் தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி காலை குகையை விட்டு வெளியே வந்தார். அந்த குகையில் குகைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமாண்டோ படையினர் வெளியில் இருந்து கண்காணித்தும் வந்துள்ளனர். 

இந்நிலையில் புனித குகைக்குள் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com