காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினாா்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைவர் ராகுலின் தாயாருமான சோனியா, அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் இதர கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தில்லியில் உள்ள தனது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் உட்பட மூத்த தலைவா்களான மன்மோகன் சிங், அகமது படேல், ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, காங்கிரஸ் தலைவா் ராகுல், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது ப.சிதம்பரம், அகமது படேல், ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோரிடம் அடுத்தது ஆட்சியமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.