எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு 2-வது நாளாக சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு 2-வது நாளாக சந்திப்பு

பாஜக அல்லாத அரசை அமைப்பதற்காக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் தொடர் முயற்சியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்

பாஜக அல்லாத அரசை அமைப்பதற்காக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் தொடர் முயற்சியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக, பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள், வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தில்லியில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) தலைவர் சரத் யாதவ் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். 
பின்னர், அங்கிருந்து உத்தரப் பிரதேசம் சென்ற அவர், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்ற சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியையும், சரத் பவாரையும் சந்தித்துப் பேசினார். மாலையில், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரிû அவர் தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
ஏற்கெனவே, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனிடையே, தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி சனிக்கிழமை மாலை அவசர ஆலோசனை நடத்தினார். 
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.
மத்திய பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்திருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேறியது. அப்போதிருந்து, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com