காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்த தேர்தலில் மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக சிவ சேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்ணிப்பு முடிவுகள் குறித்து நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. ஆனால், மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, முடிவுகள் தெளிவாகத் தெரிகிறது. 2019-ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்பதை கூற எந்த ஜோசியரும் தேவையில்லை.
இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா வதேரா ஆகியோர் கடினமாக உழைத்துள்ளனர். எனவே கடந்த 2014 தேர்தலைப் போன்று இல்லாமல், போதிய உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
அதன் தலைவர் ராகுல், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக உருவெடுப்பார். அவருக்கு கிடைக்கவுள்ள இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தது.