விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.10 நோட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய ரூ.10 நோட்டு, மகாத்மா காந்தி படம் பொறித்த நோட்டுகள் வரிசையை சேர்ந்ததாகும். ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த ரூ.10 நோட்டுகளை போன்றே புதிய ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.