பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது.
மே 19-ஆம் தேதி அதுபோன்ற சோதனையின் போது 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான பல நாடுகளின் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
அந்த 3 பயணிகளும் பாங்காக் செல்ல தயாராக இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தில்லி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.