வாரணாசி: பிரதமர் மோடி தான் போட்டியிட்ட வாராணசி தொகுதியில் சுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி தான் போட்டியிட்ட வாராணசி தொகுதியில் சுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவை சுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி தோற்கடித்துள்ளார்.