மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாய், மகன்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாய், மகன்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சரும், பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி.யுமான மேனகா காந்தி, இந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சந்திர பத்ர சிங் சோனுவை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில், மேனகா காந்தி 4,59,196 வாக்குகளும், சந்திர பத்ர சிங் சோனு 4,44,670 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் சிங் 41,681 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதேபோல்,  கடந்த 2014-இல் சுல்தான்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் காந்தி, இந்த முறை, தனது தாயாரின் தொகுதியான பிலிபிட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர் ஹேம்ராஜ் வர்மாவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். வருண் காந்தி 7 லட்சம் வாக்குகளையும், ஹேம்ராஜ் வர்மா 4.48 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com