நாட்டின் நன்மதிப்பைக் காக்க எந்த தியாகத்துக்கும் தயார்: சோனியா காந்தி

"நாட்டின் நன்மதிப்பைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நாட்டின் நன்மதிப்பைக் காக்க எந்த தியாகத்துக்கும் தயார்: சோனியா காந்தி

"நாட்டின் நன்மதிப்பைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியா காந்தி, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றி. எனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாத சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் நன்மதிப்பைக் காப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதை தொகுதி மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்த தலைவர்களின் பாரம்பரியத்தில் தொடர்ந்து பயணிப்பேன். வரும் நாள்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும்.
எனது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே உள்ளது. தொகுதி மக்கள் அனைவருமே எனது குடும்பத்தினர்தான். உங்களிடம் இருந்துதான் எனக்குத் தேவையான உத்வேகம் கிடைக்கிறது. நீங்கள்தான் எனது உண்மையான சொத்து என்று அந்த கடிதத்தில் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வென்றார். இதன் மூலம் அத்தொகுதியில் இருந்து தொடர்ந்து 4-ஆவது முறையாக அவர் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com