இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினமான இன்று அவருக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம். இந்நாட்டுக்கு அவருடைய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் அஞ்சலியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.