நேருவின் அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி அஞ்சலி

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.
நேருவின் அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினமான இன்று அவருக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம். இந்நாட்டுக்கு அவருடைய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் அஞ்சலியை பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com