புது தில்லி: மே 30ம் தேதி இந்தியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நரேந்திர மோடி, இன்று முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருசிறந்த ராஜதந்திரி என்று பாராட்டியிருக்கும் மோடி, இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த நாட்டுக்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை அளித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.