புது தில்லி: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சக அலுவலகத்தில் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பிரநிதிகள் பங்கேற்றனர்.