செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தி அறிந்து இந்தியா முழுவதிலும் இருக்கும் லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ள ராகுல் காந்தி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திப்பதும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் தனது வீட்டிலிருந்து காரில் செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் காரை ராகுல் காந்தி ஓட்ட பின் இருக்கையில் அவருடைய செல்ல நாய் பிடி மட்டுமே அமர்ந்துள்ளது. பணிகள் இல்லாத நேரங்களில் தனது செல்ல நாயுடன் ராகுல் காந்தி விளையாடி மகிழ்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. செல்ல நாய் பிடியுடன் ராகுல் காந்தி காரில் செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com