2ஜி வழக்கில் கனிமொழி, ஆ. ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கனிமொழி, ஆ. ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.