புது தில்லி: புது தில்லியில் இன்று தில்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சீருடை அணிந்த காவல்துறையினர் போராட்டத்தில் குதித்திருப்பது ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்னாயக், காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சாகேத் நீதிமன்ற வளாகத்தில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று காவல்துறையினருக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இந்த போராட்டத்தில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில் 20 காவலர்களும், 8 வழக்குரைஞர்களும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.