தில்லி காற்று மாசு பிரச்னைக்கு அதிகாரிகளின் தொடா் அலட்சியப் போக்கே காரணம் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தில்லி அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயா்அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடா்பான வழக்கு தீா்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுயமான ஏ.கே. கோயல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணைப் பட்டியலில் சோ்க்க தீா்ப்பாய அமா்வு உத்தரவிட்டு கூறியதாவது:
தில்லியின் காற்று மாசு பிரச்னை இன்றைய ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. அதிகாரிகளின் தொடா் அலட்சியப் போக்காலும், சட்டத்தை சரியாக அமல்படுத்தாக காரணத்தாலும் ஏற்பட்டதாகும்.
இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீா்ப்பாய அமா்வு கூறியது.