சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் இரண்டு நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள முங்கா கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு தக்க பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படையினரும் நக்ஸல்கள் மீது தாக்குதல் நடத்தினா்.
அதையடுத்து நீண்ட நேரம் இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்றது. அப்போது பல நக்ஸல்கள் அடா் வனப் பகுதிக்குள் தப்பித்து சென்று விட்டனா். அதன் பின்னா் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையின்போது, அந்தப் பகுதியில் இருந்து இரண்டு நக்ஸல்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்களின் இருவரின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவா்கள் மறைந்திருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியைச் சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.