கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 30 ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக இருந்தவர் ராமகிருஷ்ணன் (52). இவருக்கு 2019 ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
அதோடு, நிதிச்சுமை காரணமாக இவர்களது பணி நேரம் மற்றும் பணி நாட்களும் குறைக்கப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று அவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.