11 மாதங்களாக ஊதியம் இல்லை; பிஎஸ்என்எல் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட ஊழியர்

கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிஎஸ்என்எல் நிறுவனம்
பிஎஸ்என்எல் நிறுவனம்


கேரளாவின் நிலாம்பூர் பகுதியில் 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஒப்பந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 30 ஆண்டு காலமாக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக இருந்தவர் ராமகிருஷ்ணன் (52). இவருக்கு 2019 ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

அதோடு, நிதிச்சுமை காரணமாக இவர்களது பணி நேரம் மற்றும் பணி நாட்களும் குறைக்கப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று அவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com