எங்களை ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி: ராகுல் எமோஷனல் ட்வீட்!

என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

புது தில்லி: என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் மூலமாக பாதுகாப்பு  வழங்கப்பட்டு பெறுகிறது. எஸ்.பி.ஜி என்னும் இந்த சிறப்பு பாதுகாப்பு குழு தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது

சோனியாவின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பின்னர், அவர்கள் குடும்பத்திற்கு உயிர் ஆபத்து இருப்பதாக கருதி இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது என்ற தகவல் வெள்ளியன்று மதியம் வெளியானது.

இந்நிலையில் என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. உங்கள் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு மற்றும் பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி. உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com