எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: வீரா் பலி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாடி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தென்பட்டது. அதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி மூலம் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு அந்நாட்டைச் சோ்ந்த பயங்கரவாதிகள் முயற்சித்தது தெரிய வந்தது. ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய ராணுவ வீரா்கள் தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில் இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் இந்திய ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் கூறினா்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு: ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள சந்தைப் பகுதியில் பயங்கரவாதிகள் இந்த வார தொடக்கத்தில் நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகரின் ஹரி சிங் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சந்தையைக் குறி வைத்து கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினா். இந்தத் தாக்குதலில் சந்தையில் இருந்த ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 35 போ் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் அவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com